Translate

சனி, 11 பிப்ரவரி, 2017

                        Monthly meeting AIBSNLPWA Cuddalore


கடலூர் பகுதி கூட்டம் 11-2-2017 அன்று மாலை 3 மணிக்கு தோழர் சாந்தகுமார் தலைமையில் சிறப்பாக நடந்தது.




தோழர்கள்
அசோகன் கடலூர் பகுதிச்செயலர்
N.திருஞானம் மாவட்டச்செயலர்
சந்திரமோகன் மாவட்ட அமைப்புச்செயலர்
K.இளங்கோவன் மாவட்டத் தலைவர்
சாந்தகுமார் கடலூர் பகுதி தலைவர்
K.ரவீந்திரன்     மாநில  உதவித்தலைவர்
G.வேலாயுதம் 
P.ஜெயராமன்  மாவட்ட உதவிச்செயலர்

ஆகியோர் நமது வளர்ச்சி, 78.2 நிலுவையில் நமது முயற்ச்சியையும், தற்போதைய நிகழ்வுகளையும் தெரிவித்தனர்.

தோழர் ரகோத்தமன் நன்றி கூறினார்.


 தைப்பூசப் பெருவிழா
*******
வடலூர் வள்ளலார் தைப்பூசப் பெருவிழாவை ஒட்டி கடலூர் வணிக வைசியர் சங்கத்தின் சார்பில் சன்மார்க்கச் சொற்பொழிவு,ஆயிரம் பேருக்கு அன்னதானம் நடைபெற்றது.
சங்கத்தின் செயலாளர் நமது BSNL ஓய்வூதியர் தோழர் திருஞானம் விரிவான ஏற்பாடுகளை செய்திருந்தார்.NFTE இன் ஒரு முக்கிய தலைவரும் நமது உறுப்பினரான G.ஜெயராமன் அவர்கள்  வா ழும் வள்ளலார் விரும்பிய சமுதாயம் குறித்து  சிறப்புரை செய்தார்..
இன்றைய தமிழ்ச்சூழலில் சாதி,மதம்,சமயங்கள்,சடங்குகள் தவிர்க்க,ஆன்மநேய ஒருமைப்பாடு காக்க,ஏழ்மை பணக்காரப் பாகுபாடு களைய,கருணையிலா ஆட்சி கடுகி ஒழிய,எம்மதமும் சம்மதம் என்ற சன்மார்க்கம் தழைக்க,ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எல்லாரும் ஒருமையுளர் ஆகி உலகியல் நடத்த வள்ளலார் காட்டிய வழிகள் குறித்து விளக்கிப் பேசினார்.
நல்லக் கூட்டம்.
காலத்துக்குறிய தலைப்பும்,கருத்தும் பொருந்தி இருந்ததால்  அவரும் நாமும் மகிழ்ச்சியடைந்தோம்.
தோழர் G.ஜெயராமன் அவர்களுக்கு நன்றியையும்,வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டு,மேன்மேலும் நல்ல கருத்துக்களை விதைககுமாறு வேண்டுகிறோம்.
5-2-2017 அன்று புவனகிரியில்  சிதம்பரம் பகுதிக்கூட்டம் 

5-2-2017  அன்று புவனகிரியில்  தோழர் பாபு செட்டியார் வீட்டில் சிதம்பரம் பகுதிக்கூட்டம் சிறப்பாக நடந்தது.50 ஓய்வூதியர்கள் கலந்துக் கொண்டனர்.

தோழர்கள் 
K.சந்திரமோகன் மாவட்ட அமைப்புச்செயலர்
K.வெங்கடரமணன் மாவட்டத் துணைத்தலைவர்
காஜா கமாலுதீன்  மாவட்ட பொருளாளர்
இஸ்மாயில் மரைக்கார் மாவட்டச்செயலர்.
ராஜசேகர் மாவட்ட செயகுழு உறுப்பினர்.

சிறப்புரையாற்றினர்.

விழுப்புரம் பகுதி மாதாந்திரக கூட்டம் 5-2-2017

5-2-2017 அன்று தொலைபேசி நிலைய மனமகிழ் மன்றத்தில் தோழர் வீரராகவன்   தலைமை வகிக்க ,பகுதி செயலர் தோழர் வீரமணி வரவேற்புரை நல்கினார்.
மௌன அஞ்சலி
விழுப்புரம் தோழர் கதிர்வேல் தாயார், தோழர் ஜெயராம்குமார் AGM மறைவிற்கு  மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்வுகள்
ஜனவரி மாத பணிஒய்வுக்குப்பின் நமது சங்கத்தில் இணைத்துக் கொண்ட தோழர் தேவநாதன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டது.
தோழர்கள் J.K.கண்ணன்,ஜெயபால்,செல்வம் அமைப்புநிலை விவாதத்தின்போது 78.2 IDA நிலுவை விரைவாக கிடைத்திட நம் அமைப்பு சார்பாக இயக்கம் நடத்திட வேண்டும் என கூறினர்.
தோழர் D.ஷண்முக சுந்தரம் அவர்கள் நாம் வருமான வரி பிடித்தம் விலக்கு பெற நமது சேமிப்பு விவரங்களை பென்ஷன் வழங்கும் அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்று கூறினார்..
தோழர் மகாலிங்கம் ஜூலையில் தனக்கு நேர்ந்த உயிருக்கு ஆபத்தான ரோடு விபத்தில் நமது தோழர்கள் காலத்தே செய்த பேருதவியால் நலம் பெற்று திரும்பியதை நினைவு கூறி வாழ்க்கையில் மறக்க முடியாது என்றுக்கூறி அனைவருக்கும் நன்றி கூறினார்.
தோழர் CTS மணி தன இருதய அறுவை சிகிச்சை மருத்துவ பில் கிடைப்பதற்கு உதவிச்செய்த மாவட்ட சங்கத்திற்கு நன்றி கூறினார்.
78.2 IDA நிலுவை கிடைக்க பெற்ற தோழர்கள் B.துரைபாபு, J.K.கண்ணன், ஜெயபால்ஜெயலக்ஷ்மி,ராஜகோபால்,விஜயலட்சுமி சுந்தரேசன் தலா ரூபாய் 1000 சங்கத்திற்கு நன்கொடை அளித்தனர்.
தோழியர் செல்வரசு மேரி அனைவருக்கும் தன வாழ்த்துக்களை தெரிவித்தார்.
தோழர் N.T மாவட்டச்செயலர் இதுகாரும் நிலுவைகள் பெற்ற 17 பெயர்களையும்,மற்றும் ஆணைகள் பெறப்பட்டு இன்னும் நிலுவை பெறப்படாதவர்களுக்காக தபால்/வங்கி அலுவகங்களுக்கு சென்று விரைவாக கிடைப்பதற்காக நமது குழுவுடன் அணுகிய விவரங்களையும் தெரிவித்தார்.மருத்துவ பில் பட்டுவாடாவிற்காக நாம் செய்த முயற்ச்சிகளை எடுத்துக்கூறினார்.நமது 600 உறுப்பினர்களில் 555 ஆயள் சந்தா உறுப்பினர்களாக இருப்பது நமது சங்கத்திற்கு கிடைத்த அங்கீகாரம் என்று மகிழ்ச்சியாக கூறி,விரைவில் எல்லோரையும் ஆயள் சந்தா உறுப்பினர்களாக
மாற்றிவிடுவோம் என்ற நம்பிக்கையும் தெரிவித்தார்.செயற்குழுகூட்ட முடிவுகளையும்,விவரங்களையும் தெரிவித்தார்.கள்ளகுறிச்சி சிறப்புக் கூட்டம் பற்றியும் எடுத்துரைத்தார்.
தோழர் PJ அதாலத் கூட்டங்களில் நாம் ஓய்வூதியர்களின் பிரச்னைகளில் நாம் எவ்வாறு பல்வேறு காலங்களில் செயல் பட்டு ஓய்வூதியர்களின் நலன் காத்தோம் என்பதை விளக்கினார்.
மாவட்ட அமைப்புச் செயலர் தோழர் J.வெற்றி புதிய கணினிவாங்குவதற்காக
ரூ500 முதல் நன்கொடையாக அளித்தார்.
50 உறுப்பினர்கள் கலந்துக் கொண்டு நிகழ்வினை சிறப்பித்தனர்.
தோழர் B.துரைபாபு நன்றி நவிர்ந்தார்.




புதன், 1 பிப்ரவரி, 2017

31-1-2017 அன்று  பணி ஓய்வுபெற்றவர்கள்


தோழர் S.பெரியசாமி SDE விழுப்புரம்

தோழர் S.எழுமலை TT விழுப்புரம்

தோழர் S.கருத்தாபிள்ளை TT கள்ளக்குறிச்சி

தோழர் S.கணபதி  TT நெய்வேலி நகர்

தோழியர் K.கலா JTO நெய்வேலி நகர்

நமது சார்பாக தோழர் KVR கலந்துக் கொண்டு ஓய்வுபெற்ற இவர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்து 
வாழ்த்துரை வழங்கினார்.


AIBSNLPWA கடலூர் பணிஓய்வு பெற்ற இவர்கள் பல்லாண்டு  

நீள் ஆயுளும்,நிறை செல்வமும் பெற்று  மகிழ்ச்சியுடன் 

வாழ்க வளமுடன் என்று வாழ்த்துகின்றோம
தமிழ்மாநில சுற்றறிக்கை




AIBSNLPWA கள்ளக்குறிச்சி பகுதி சிறப்புக்கூட்டம்

தியாக துர்கம் , இளவனாசர்கொட்டை,சின்னசேலம், சங்கராபுரம், உளுந்தூர்பேட்டை , வடக்க நங்கல்,முரார்பாத்,பொட்டியம், ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய கள்ளக்குறிச்சியில்  ஒரு  மாபெரும் கூட்டம்  26-01-2017 வெள்ளிக்கிழமை காலை , தொலைபேசி நிலையத்தில் சிறப்புக்கூட்டம் நடைபெற்றது.25 தோழியர்களும்,100 தோழர்களும் மகிழ்ச்சியுடன் கலந்துக் கொண்டு தங்கள் ஆர்வத்தினை வெளிபடுத்தினர்.
கடலூர்,சிதம்பரம்,விழுப்புரம்,திண்டிவனம்,செஞ்சி,விருத்தாசலம், முதலிய மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து முன்னணி தோழர்கள் கலந்துக்கொண்டனர்.


தோழர் L .ஜெகந்நாதன் தலைமை வகித்தார். தோழர் நஸீர் பாஷா முன்னிலை வகித்தார்.
தோழர் P .அழகிரி வரவேற்புரை நிகழ்த்தினார்.
தோழர் இளங்கோவன் ,மாவட்ட தலைவர் ,
தோழர் P.ஜெயராமன் மாவட்டத் துணைத்தலைவர்
தோழர் K .வெங்கட்டரமணன்   மாவட்ட துணை தலைவர் ,
 
தோழர் N .திருஞானம்.மாவட்ட செயலர்,
 
தோழர்  K.சந்திரமோஹன்  மாவட்ட அமைப்புச்செயலர்  ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
                                    
தோழர். K .முத்தியாலு   தமிழ்மாநில செயலர் ,
தோழர் K .இரவீந்திரன் மாவட்ட துணைத்தலைவர்  ஆகியோர் சிறப்புரை  வழங்கினர்.







இந்த சிறப்பு கூட்டத்தில் தோழர் முத்தியாலு அவர்கள்  நம் சங்கத்தின் செயல்பாடுகளை தெளிவாக ஆற்றிய உரை மிக சிறப்பாக அமைந்தது.


தோழர் N .திருஞானம்.மாவட்ட செயலர் நமது மாவட்டத்தின் சிறப்பான செயல்பாடுகளையும் தற்போது உள்ள 600 உறுப்பினர்களில் 553 தோழர்கள் ஆயுட்கால சந்தா தோழர்கள் என்பதையும்,. மாதாமாதம் உறுப்பினர் எண்ணிக்கை அதிகரித்து வருவதையும் மகிழ்வுடன் எடுத்துரைத்தார்.
கள்ளகுறிச்சி பகுதியில் ஏற்கனவே இருந்த 20 ஆயுள் கால உறுப்பினர்களோடு, இன்றும்11 புதிய ஆயுள் கால உறுப்பினர்கள் இணைந்துள்ளது தனக்கு ஒரு புதிய உத்வேகத்தையும்,நம்பிக்கையையும் ஏற்படுத்துவதாக இயம்பினார்.

நமது நீண்டநாள் குறிக்கோளாக இருந்த கள்ளகுறிச்சி பகுதி நிறுவபட்டதற்கு இந்த பகுதி முன்னணி தோழர்களுக்கு நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.
கள்ளக்குறிச்சியின் ஒருங்கிணைப்பு குழுவில்  ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளாகளின் பெயர்கள்.
தலைவர்: தோழர் R.பாலசுப்ரமணியன் ( DE ஒய்வு )
செயலர்  : தோழர் K .செல்லையா
உதவிச்செயலர்:P.இன்பராஜன்
 
பொருளாளர் : தோழர் R.  ராஜேந்திரன் 
அமைப்பு செயலர்: தோழர் அர்ச்சுணன் .
செயற்குழு உறுப்பினர்கள்:  1.A.மாயவன்
                                2. G.  ராஜேந்திரன் 
                                3.S.தேசிங்கு
                                4.G.மதியழகன்
                                5.B.பக்கிரிசாமி
                                6.R.இந்திராணி
                                7.V.ராஜாக்கண்ணு
                                8.P.அழகிரி
முத்தாய்ப்பாக மதியம் மிகவும் சுவையான உணவு முக மலர்ச்சியுடன் எல்லோருக்கும் அளித்து தங்களின் விருந்தோம்பலை வெளிபடுத்தியது எல்லோரையும் மகிழ்வித்தது.
 தோழர் K .செல்லையா நன்றி கூற சிறப்புக்கூட்டம் இனிதே நிறைவுற்றது.