Translate

ஞாயிறு, 19 ஆகஸ்ட், 2018

கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு நமது அஞ்சலி

நன்றி-தஞ்சை கதிரவன்

வெள்ளி, 17 ஆகஸ்ட், 2018

கண்ணீர் அஞ்சலி

·         அடல் பிகாரி வாஜ்பாய்
தோற்றம்:25 டிசம்பர்1924      இறைவனடி: 16-8-2018

அடல் பிகாரி வாஜ்பாய் 1996ம் ஆண்டு சில காலமும், 1998ல் இருந்து 2004 வரையிலும் இந்தியாவின் பிரதமராக பதவி வகித்தவர். 

இவர் பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். மத்தியப் பிரதேச மாநிலத்தின் குவாலியரில் பிறந்த இவர் திருமணம் செய்து கொள்ளாதவர்

.முன்பு வகித்த பதவிகள் இந்தியாவின் 10வது பிரதம மந்திரி (1998–2004).

·         கல்வி: முதுகலை பட்டம் (அரசியல்)
                       Lakshmibai CollegeDAV College, Kanpur
.பணி: அரசியல்வாதிகவிஞர்
. புத்தகங்கள்:16
. கவிதைகள்:வாஜ்பாய் எழுதிய கவிதைகள், அவரின் கட்சியில்        மேற்கோள்  காட்டி பேசும் அளவுக்கு இருந்தது
இந்திய அரசியலில் அழுத்தமான கால்தடத்தைப் பதித்துள்ள தலைவர்களின் முக்கியமானவராகக் கருதப்படுபவர் அடல் பிகாரி 
.பாஜ.,கவை பிடிக்காதவர்களுக்கு பிடித்தமான பிரதமராக திகழ்ந்தார்.1.      இளம்வயதிலேயே ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடியதால் சிறை சென்றவர். ஆர்.எஸ்.எஸ் மற்றும் ஜன சங்குக்கு ஆதரவாக செயல்படுவதற்கு முன் கம்யூனிசத்தில் இருந்தார்.
2.      1950ல் சட்டக் கல்லூரியின் படிப்பை பாதியில் நிறுத்தி ஆர்.எஸ்.எஸ் இதழில் பணியாற்றினார். ஆர்.எஸ்.எஸ் இல் இருந்த போதே பாஜக.,வின் தாக்கம் ஏற்பட்டது.

. வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் தீவிரமாக கலந்து கொண்டார்.


1.      1957 முதல் 10 முறை அவர் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றார். 

2009ல் அரசியலில் மும்முரமாக செயல்படுவதிலிருந்து ஒதுங்கும் வரை அரசியலில் சிறப்பாக இருந்தார்.
  பாஜக சார்பில் 5 வருடங்கள் முழுமையாக முதலில் ஆண்ட பிரதமர் என்ற பெருமையை வாஜ்பாய் பெற்றார். 
மொராஜி தேசாய் பிரதமராக இருந்த பொழுது, வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த வாஜ்பாய், ஐ.நா.,வில் ஹிந்தியில் பேசினார்.

3 முறை பிரதம மந்திரி பதவியில் இருந்தார். மக்களவைக்கு 9 முறையும், மாநிலங்களவைக்கு 2 முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

கார்கில் போரில் வெற்றிப் பெற்றது, அவர்களின் தலைமையை மிகவும் தைரியமான மற்றும் வலுவானத் தலைமை என்று நாடு முழுவதும் போற்றச்செய்தது.

அவர் பதவியில் இருந்தபோது சாலை திட்டங்களில் 50 சதவீதம் நிறைவேற்றினார்.தங்க நாற்கரை சாலையில் இவரது பங்கு மகத்தானது.

கவிதைகளும்,சிறந்த நூல்களும் எழுதுபவர்கள் எந்த வண்ணத்தில் இருந்தாலும் மனித நேயம் உள்ளவர்களாகவே இருப்பார்கள்.

அவர் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறோம்.


தங்கராசா வாஜ்பாய் இறந்துவிட்டாரே ..மதுரை சின்னபிள்ளை கண்ணீர் மல்க அஞ்சலி

சின்னப்பிள்ளை மதுரை மாவட்டம், அழகர் கோவில் சாலையில் உள்ள கள்ளந்திரி கிராமத்தில் பிறந்து, மதுரையிலிருந்து பன்னிரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பில்லுச்சேரி கிராமத்தில் வசித்து வருகிறார்.கிராமப்புற மகளிரிடையே சிறுசேமிப்பு பழக்கம் ஏற்படுத்தி, களஞ்சியம் எனும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் பொருளாதார நிலையை மேம்படுத்திக் காட்டினார் சின்னப்பிள்ளை.
இதற்காக கடந்த 2001-ம் ஆண்டு ஜனவரி மாதம் 4-ம் தேதி மத்திய சமூக மற்றும் பெண்கள் நலத்துறையின் சார்பாக நடைபெற்ற விருது விழாவில், ஸ்த்ரீ ஷக்தி புரஷ்கார் விருதினை மாதா ஜிஜாபாய் பெயரால் மதுரையைச் சேர்ந்த களஞ்சியம் சின்னப்பிள்ளை அன்றைய பிரதமர் வாஜ்பாய் கைகளால் பெற்றார்.

இந்நிலையில் இன்று முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இயற்கை எய்தியுள்ளார். இதுகுறித்து வேதனை தெரிவித்துள்ள மதுரை சின்னபிள்ளை என் சேவைக்கு அங்கீகாரம் அளித்து சக்தி புரஸ்கார் விருது வழங்கியவர் வாஜ்பாய். அப்போது திடீரென எனது காலில் விழுந்து விட்டார் வாஜ்பாய். இதைப் பார்த்து நான் அதிர்ந்து விட்டேன். நாட்டுக்கே தலைவர் எனது காலில் விழுந்து விட்டாரே என்று அதிர்ச்சியாகி விட்டது.அப்போது எனக்கு அருகில் இருந்த ஒருவர் தமிழில் என்னிடம், நீங்க செய்த செயலைப் பார்த்து வியந்து உங்களை கடவுளாக எண்ணி காலில் விழுந்தார் வாஜ்பாய். தப்பா நினைச்சுக்காதீங்க என்று கூறினார். 

அந்த மாதிரி ஒரு தங்க ராசா இன்று இறந்து விட்டது எனக்கு வருத்தமாக உள்ளது. எனது காலில் விழுந்து வாஜ்பாய் வணங்கியதை என்னால் மறக்க முடியாது.






புதன், 15 ஆகஸ்ட், 2018

72 வது சுதந்திரதினவாழ்த்துக்கள்

31    மாநிலங்கள்
1618  மொழிகள்
6400  சாதிகள்
6     மதங்கள்
6     இனங்கள்
29    பெரிய திருவிழா கொண்டாட்டங்கள்
காஷ்மீர் முதல் குமரி வரை ஒற்றுமையுடன் நம்பிக்கை மனிதர்கள் மகிழ்ச்சியுடன்
இந்தியராக மகிழ்ச்சி கொள்கிறோம்.
சுதந்திரதின வாழ்த்துக்கள்

வெள்ளி, 10 ஆகஸ்ட், 2018


6வது தமிழ்மாநில மாநாடு நிகழ்வுகள் 
07-8-2018 - திருச்சி 

தேசிய, சங்க கொடியேற்றம் முழக்கங்களுடன்



















 












அரங்க மேடை-தலைவர்களும் விருந்தினர்களும்



 

மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்பித்த முக்கிய விருந்தினர்களுக்கு  நினைவு பரிசளிப்பு நிகழ்வுகள் 
திருச்சியில் மிக பிரபலமான இதய நோய் நிபுணர் டாக்டர் திரு.செந்தில்குமார் நல்லுசாமி அவர்கள் வரவேற்பு குழுவின் தலைவராக இருந்து இந்த மாநாடு சிறப்பாக நடைபெற மிகவும் உதவிகரமாக இருந்தார்.மற்றும் மாநாட்டில் இதய பாதுகாப்பு குறித்து பவர் பாயிண்ட் மூலம் எளிய தமிழில் பாமரரும் புரிந்துக் கொள்ளும் வகையில் உரை நிகழ்த்தினார் . அவரை கௌரவிக்கும் விதமாக மகிழ்ச்சியுடன் அளித்த நம் நினைவு பரிசு .
நம் மதிபிற்குரிய திரு சஞ்சீவி பொதுமேலாளர் அவர்களுக்கு பரிசளிக்கும் நிகழ்ச்சி.
எல்லோருக்கும் ஒரு அமைப்பு இருந்தால் தான் அவர்களின் உரிமைகளை பெற்றடய முடியும்  என்ற ஒரு அனுபவத்தையும் கூறிய வை  எல்லோருக்கும் நினைவில் நிற்கும்.
நம் மதிபிற்குரிய திரு D.தமிழ்மணி  பொதுமேலாளர் அவர்களுக்கு பரிசளிக்கும் நிகழ்ச்சி...இவர் ஒரு மனித நேயப்பண்பாளர். தமிழ்மாநிலத்தில்  GRIEVANCE CELL தோற்றுவித்து நம் நிலுவைகளை  பெற நமக்கு அரணாய் திகழ்ந்தவர்.நம் மண்ணின் மைந்தர்களில் ஒருவர்.
சென்னை தொலைபேசி மாநில செயலர் செயல் , ஆற்றல் வீரர் 
தோழர் s .தங்கராஜ்.

திருச்சி மாநாட்டு வரவேற்புக் குழு வசதியான  தங்குமிடம்,அருமையான உணவு ஏற்பாடுகள் ,சிறப்பான அரங்ககாட்சி ஒலி,ஒளி அமைப்புகள்,மனங்கவர்ந்த வரவேற்பு என இந்த 6 வது மாநாடு மனதில் நீங்கா இடம்பெற்றுள்ளது. 
திருச்சி தோழர்கள் அனைவருக்கும் நன்றியுடன் வாழ்த்துகள்.

தமிழ்மாநில 6 வது மாநாட்டில் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள்
தலைவர்
தோழர்   V.ராமாராவ்
சென்னை டிராபிக்
செயலர்                   :
தோழர்   R.வெங்கடாசலம்
திருச்சி
உதவித்தலைவர்    1
தோழர்   G.R.தர்மராஜன்
மதுரை
       2
தோழர்   V.சந்திரமோகன்
கடலூர்
             3
தோழர்   T.வேடியப்பன்
தர்மபுரி
                   4
தோழர்   C.பழனிச்சாமி
கோவை
                   5
தோழர்   V.காத்தபெருமாள்
திருச்சி
                   6
தோழர்   D.விக்டர்ராஜ்
STR சென்னை
                   7
தோழர்   ச.ஸ்ரீதரன்
STR சென்னை
                   8
தோழர்   S.ஜெயச்சந்திரன்
காரைக்குடி
உதவிச்செயலர்    1
தோழர்   S.சம்பத்குமார்
சென்னை டிராபிக்
       2
தோழர்   S.சம்மனசு
திருநெல்வேலி
             3
தோழர்   N.அம்பிகாபதி
தூத்துக்குடி
                   4
தோழர்   N.S தீனதயாளன்
STR சென்னை
                   5
தோழர்   S.சுந்தரகிருஷ்ணன்
STR சென்னை
                   6
தோழர்   K.ரமணி
சேலம்
                   7
தோழர்   S..சூரியன்
மதுரை
                   8
தோழர்   B.அருணாச்சலம்
கோவை
                   9
தோழர்   S.பட்டாபிராமன்
சேலம் E
பொருளாளர்       1
தோழர்   S.காளிதாஸ்
சென்னை டிராபிக்
உதவிபொருருளாளர்1
தோழர்   T.முருகேசன்
தஞ்சை
                   2
தோழர்   மங்கை சவுந்தரராஜன்
சென்னை டிராபிக்
அமைப்புச்செயலர்  1
தோழர்   V.S முத்துகுமரன்
வேலூர்
       2
தோழர்   E.கனகராஜ்
திருநெல்வேலி
             3
தோழர்   M.M. வைரமணி
விருதுநகர்
                   4
தோழர்   B.டேவிட்
நாகர்கோவில்
                   5
தோழர்   N..தனபால்
கும்பகோணம்
                   6
தோழர்   பாலசுப்பிரமணியமன்
மதுரை
                   7
தோழர்   S.பிரான்சிஸ் சேவியர்
தஞ்சை
                   8
தோழர்   M.சாம்பசிவம்
புதுச்சேரி
சிறப்பு அழைப்பாளர்
தோழர்   R.ஆறுமுகம்
திருச்சி
            
உறுப்பினர்கள்  உற்சாகத்துடன் கலந்துக்கொண்ட அரங்ககாட்சிகள்