Translate

சனி, 30 மே, 2015

                                                   31-5-2015 அன்று 
                  
             பணிஓய்வு பெற்ற நமது தோழர்கள்



 30-5-2015 இன்று திரு சமுத்திரவேலு DGM தலைமையில்,திரு சாந்தகுமார் DGMF முன்னிலை வகிக்க,திரு மகேஷ் AGM Admn தொகுத்து வழங்க பணி நிறைவு பாராட்டுக்கூட்டம் வெகுசிறப்பாக நடந்தது. 
நிர்வாகம் சார்பில் பொன்னாடை அணிவித்து,பணி சேவை மடலும் அளித்து கவுரவிக்கப்பட்டனர்.


ஓய்வுபெற்ற இவர்களை உற்ற நண்பர்களும்,அலுவலக ஊழியர்களும்,தொழிற்சங்க தலைவர்களும் பாராட்டி வாழ்த்துரை வழங்கினர்.




        பணிஓய்வு பெற்ற  நமது தோழர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து, நிறைவுடன் பணிஓய்வு பெறுவதாக கூறினர்.
       திருமதி இலட்சுமி SDE நிர்வாகம் பொது ஏற்பாடுகளை செய்து,நிறைவாக நன்றி கூறினார். 

புதன், 27 மே, 2015

அஞ்சலி

திரு S.நாகரத்தினம் SDE
BSNL இல் இருந்து ஓய்வுபெற்ற நண்பர் இன்று அதிகாலை அவரது இல்லம் நெ.2 ரத்தினவேல் நகர்,பீச் ரோடு,கடலூர்-இல் இறைவனடி சேர்ந்தார்.
இவர் ராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற ஒரு ஊழியரும் ஆவார்.நமது BSNL இல் JTO,SDE works என்ற பல்வேறு பணிகளை சிறப்பாக செய்து சிறந்த நட்பு குழாத்தினை தன்னை சுற்றி அமைத்து கொண்டு வாழ்ந்தவர்.
ஓய்வு பெற்ற பிறகு நமது நலச்சங்கத்தினில் சேர்ந்து எல்லா கூட்டங்களிலும் கலந்து கொண்டு நண்பர்களை மகிழ்வித்தவர்.

அன்னார் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்.

நாளை அவரது உடல் கடலூரில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை

ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்க் கொள்கின்றோம்.