Translate

திங்கள், 4 பிப்ரவரி, 2019

கடலூர் மாவட்ட பகுதிகூட்டங்கள்

3-2-2019  விழுப்புரம்

















3-2-2019 அன்று விழுப்புரம் பகுதி கூட்டம் தோழர் வீரராகவன் தலைமையில் சிறப்பாக நடந்தது.கடலூர் மாவட்டச்சங்கத தலைவர் PJ,உதவித்தலைவர் NT கலந்துக் கொண்டு தற்போதைய நிலைமைகளையும்,சவால்களையும் நம் முயற்சிகளையும் விவரித்தார்.தோழர் சண்முகசுந்தரம் புதிய வருமானவரி மாற்றங்களை விவரித்து விளக்கினார்.ஆயுள் சந்தா உறுப்பினராக சேர்ந்த தோழியர் நிர்மலா தேவி கைத்தறி ஆடை போர்த்தி கவுரவிக்கப்பட்டார்.

31-1-2018   கடலூர் மாவட்ட பணி ஒய்வு விழா









ஞாயிறு, 3 பிப்ரவரி, 2019

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பள்ளிகளை சீரமைக்கும் நமது சங்க பணி ,,,மாநிலச்சங்க செய்தி

தோழர்களே ,
ஜனவரி மாதம் 24ஆம் தேதி நம் மாநில செயலர் தோழர் ஆர்வி. மற்றும் சென்னை தொலைபேசி மாநில செயலர் தோழர் தங்கராஜ் மற்றும் பொருளாளர் தோழர் கண்ணப்பன் ,திருவாரூரில் இருக்கும் தமிழ் மாநில உதவி பொருளாளர் தோழர் முருகேசன்  ஆகியோர் கொண்ட புனரமைப்பு  குழு திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுக்காவில்  கொறுக்கை எனும் கிராமத்திற்கு சென்று அங்கு இயங்கி வந்த திருவள்ளுவர் அருள் நெறி உதவி பெரும் நடுநிலை பள்ளி சமீபத்திய கஜா புயலினால் மிகவும் இடிந்து போயுள்ளதை கண்டு கண்ணீர் குத்தது.
சுமார் 175 பேர் படிக்கும் இருபாலர் பள்ளியை சீரமைக்க பண உதவி செய்வதாக கூறி பள்ளி முன்னாள், இந்நாள் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஊர் பெரியவர்கள், சமூக ஆர்வலர்களிடம் உடனடியாக பள்ளியை சீரமைக்க வேண்டும், பள்ளி மாணவர்களுக்கு படிப்பு கொஞ்சமும் பாதிக்கப்படக் கூடாது என்று கூறினார்கள். உடனே அவர்களும் ஒரு மாதம் அல்லது 40 நாட்களுக்குள் கட்டி விடலாம் என உறுதி அளித்துள்ளனர்.
அதன் பிரகாரம் நேற்று பிப்ரவரி முதல் தேதி மனை பூஜைகள் செய்து வேலைகளை துவக்கி விட்டார்கள். 
இனி பள்ளி கட்டிடம் மற்றும் சிதிலமடைந்த அய்யன் திருவள்ளுவர் சிலையும்  சீரமைக்கப்பட்டு புத்துயிர் பெறும் .
வாழ்க நம் சங்க சேவைகள் !  வளர்க நம் சங்கம் !!  வளர்க ! வளர்கவே !!

வெள்ளி, 1 பிப்ரவரி, 2019

நமது அகிலஇந்திய  தலைவர் P.S.ராமன்குட்டி அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி..

நன்றி.தமிழில் நமது திருநெல்வேலி இணையம்


மத்திய ஓய்வூதிய இலாகா
நமது கோரிக்கையான
ஓய்வூதிய மாற்றத்தை
இதுவரை மறுதலிக்கவில்லை

ஓய்வூதிய மாற்றமும்
ஊதிய மாற்றமும்
ஒன்றுக்கொன்று தொடர்புடையதல்ல.
இரண்டும் வெவ்வேறானவை
வெவ்வேறு மட்டத்தில்
முடிவுசெய்யப்பட வேண்டியவை
என்பதை ஓய்வூதிய இலாகா
ஒத்துக்கொண்டுள்ளது.

அதனால்தான் ஓய்வூதிய இலாகா
DOT அனுப்பிய கடிதத்தை
திருப்பி அனுப்பி வைத்தது.

ஓய்வூதிய மாற்றத்திற்கான
உறுதியான திட்டத்தை
அனுப்பிவைக்க DOT-ஐ
கோரியிருந்தது அந்தக்கடிதத்தில்.

தற்பொழுது அந்தக்கடிதம்
DOT-தான் உள்ளது
சஞ்சார் பவனில் உள்ள
ஒருசில அதிகாரிகள்
நாடகம் ஆடுகிறார்கள்
[7:44 AM, 2/1/2019] Aruna Madurai: BSNL-லிருந்து
பணிநிறைவு பெற்றவர்களுக்கு
ஓய்வூதிய மாற்றம் செய்ய
CPC- ஏதாவது பரிந்துரைத்திருக்கிறதா?
என்று கேட்கிறார்கள். 
உண்மையில்  CPC எதுவும்
பரிந்துரைக்கவில்லைதான்.
அதற்கு
முக்கிய காரணகர்த்தாக்கள்
இதே DOT அதிகாரிகள்தான்.

நாம் CPC -க்கு அளித்த
மெமோரண்டத்தின் மீது
கருத்து கேட்டு DOT-க்கு
05-01-2015 அன்று
CPC கடிதம் அனுப்பியது

நமது சங்கத்தின் சார்பில்
04-08-2015 அன்று
தொலைத்தொடர்பு செயலர்
திரு.R.K.கார்க்  அவர்களை சந்தித்தபோது
CPC-க்கு எந்தவித பதிலும்
அனுப்பவில்லை என்று
தெரியவந்தது.
நாம் சுட்டிக்காட்டிய பின்தான்
சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம்
உடனே அனுப்பிவைக்க
உத்தரவிட்டார் கார்க்.
16-08-2015 அன்று DOT இடமிருந்து
CPC க்கு கடிதம் அனுப்பி
அது போய்ச்சேரும் பொழுது
CPC தனது அனைத்து வேலைகளையும்
முடித்து மூட்டை கட்ட
தயாராக இருந்த சமயத்தில்
கடிதம் போய்ச்சேர்ந்ததால்
கடிதம் குப்பைக்கூடையில்
அடைக்கலமானது.
இந்தப் பிரச்னையில்
எவ்வளவு தாமதப்படுத்த முடியுமோ
அவ்வளவு தாமதத்தை
செயற்கையாக உருவாக்கிய
அதே DOT அதிகாரிகள்
இன்று கேட்கிறார்கள்
CPC பரிந்துரை எங்கே?  என்று
 
இப்போது கூட வாய்ப்பு
உள்ளது.
DOT ஓய்வூதிய மாற்றம் சம்பந்தமாக
உறுதியான திட்டத்தை
முன்மொழியும் பட்சத்தில்
ஓய்வூதிய இலாகா
அனுமதி அளிக்க தயாராக
உள்ளது

DELINKING சம்பந்தமாக
AUAB -ம்  கடிதம் அனுப்பியிருப்பது
பாராட்டத்தக்கது.
தோழர்கள்
சந்தேஷ்வர்சிங் அவர்களுக்கும்
அபிமன்யு அவர்களுக்கும்
நன்றி உரித்தாகுக.




We still have hopes.Read the following message from PSR