Translate

சனி, 19 நவம்பர், 2016

15/11

BANGALORE CWC ACCEPTED INVITATION FROM ODISHA COMRADES TO HOLD OUR NEXT ALL INDIA CONFERENCE IN 2018 IN PURI, ODISHA.


BANGALORE CWC ACCEPTED THE INVITATION FROM BIHAR CIRCLE COMRADES
TO HOLD THE NEXT CWC MEETING IN PATNA IN 2017.
EXACT DATE WILL BE DECIDED LATER.
தோழர் S.ரகோத்தமன் இல்ல திருமண விழா
நமது உறுப்பினர் தோழர் S.ரகோத்தமன் மகள் திருமண விழாவிற்கும்,வரவேற்பிற்கும் நமது கடலூர் உறுப்பினர்களும், நண்பர்களும் பெருந்திரளாக கலந்துக் கொண்டு மணமக்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.





ஓய்வுபெற்றோர் குறித்த செய்திகள்
..நன்றி-ஒலிக்கதிர்/தோழர் R.பட்டாபிராமன் மாநிலச்செயலர் NFTETN


செவ்வாய், 15 நவம்பர், 2016

 12-11-2016 ல் பெங்களூரூவில் நடைபெற்ற 78.2% அகவிலைப்படி இணைப்பு வெற்றி விழா மாநாடு 


மதுரை உதவிச் செயலர் வீராசாமி ஏலக்காய் மாலை அணிவித்து,பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.


தஞ்சை செயலர் சாமிநாதன் தஞ்சை பிரகத்ஹீச்வர் கோயில் மாதிரி நினைவு பரிசு அளித்து,பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.









 கடலூர் செயலர் திருஞானம் கடலூர் வேத விநாயகர் கோவில் மாதிரி நினைவு பரிசளித்து,,பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.







 












 



சிறப்பு விருந்தினர் மாண்புமிகு. 
ஆனந்தகுமார்,
 ( அமைச்சர் .இரசாயானம் மற்றும் உரத்துறை பாராளுமன்ற விவகாரங்கள் கூடுதல் பொறுப்பு)

காலையில் பட்டேல் பவனில் AICWC நடந்தபிறகு, மாலை இரண்டு மணிக்கு பிறகு SHESHA மகாலில் வெற்றி விழா வெகு விமரிசையாக எல்லா மாநில சங்கங்களின் பங்கேற்போடு நடந்தது.நமது தலைவர்கள் இதுகாரும் நம்முடைய இடையறா விடாமுயற்சியுடன்  
மாண்புமிகு அமைச்சர்  
ஆனந்தகுமார்
உதவியுடன் நடத்திய நமது சாதனைகளை கோர்வையாக தொடர்ச்சியாக எடுத்துரைத்தார்கள்.குறிப்பாக 6௦:40 விதி நீக்கப்பட்டது நமக்கு மட்டில் இல்லாமல் இன்னும் பணியில் இருக்கும் ஊழியர்களுக்கும் மிகப்பெரிய சாதனையை வென்றெடுத்துள்ள வெற்றிக்கு நாம் மட்டிலுமே சொந்தக்காரர்கள் என்பதையும் சுட்டிக்காட்டினர்.மத்திய அரசாங்க ஓய்வூதியர்கள் போல 7 வது சம்பள கமிஷன் பயன்களை நமக்கும் அளித்திட அரசாங்கத்தினை அணுகுவதற்கான திட்டங்களைப் பற்றியும் எடுத்துரைத்தனர்.  உறுப்பினர்களாக இல்லாதவர்களையும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு உறுப்பினரை சேர்த்து நமது எண்ணிக்கையை கூட்ட வேண்டும் என்ற கருத்தினையும் எடுத்துரைத்தார்.
தமிழகத்தின் சார்பாக 100 உறுப்பினர்கள் உற்சாகமாக கலந்துக் கொண்டனர்.நமது கடலூர் சார்பாக 17 உறுப்பினர்கள் கலந்துக் கொண்டனர்.
எல்லா பகுதிகளில் இருந்தும் வந்திருந்த நமது தலைவர்களும்,உறுப்பினர்களும் நமது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொண்டனர்.
Minister came straight from the airport to attend our meeting.. A warm welcome was given to him. A mind blowing and heart touching felicitation speech with beautiful narration of  the incidences by Com DG was the highlight of the meeting. In his speech he has put up our demand of Pension Fixation at par with 7th CPC and he justified our demand also beautifully and logically. He on behalf of our association sought the help of the minister. Really it was a wonderful and mind blowing moments then. The minsiter was much moved and over whelmed.

Minister Ananth kumar ji  in his address told that he was a son of a trade union leader of Railway Employees. So he respected our feelings and demands. He informed that he would be ready to help us as he had done earlier and had told our leaders to meet him in Newdelhi.
Com DG thanked the minister immediately for his assurance for help and we would definitely achieve our pension revision and further a fitting Felicitation meeting would be conducted for the Minister in some other place with more comrades will attend the meeting.
In this way the special conference ended with National anthem.




திங்கள், 7 நவம்பர், 2016

AIBSNLPWA விழுப்புரம் பகுதி மாதாந்திரக்கூட்டம் 6-11-2016







தோழர் வீரராகவன் தலைமையில் AIBSNLPWA விழுப்புரம்  பகுதி மாதாந்திரக்கூட்டம் 6-11-2016 அன்று சிறப்பாக நடந்தேறியது.70 ஓய்வூதியர்கள் 15 மகளிர் கலந்துக் கொண்டனர்.

மறைந்த தோழர்கள் பரங்கிபேட்டை ஜலீல்,யசோதா அம்மாள் (திருமதி கோதையின் தாய்) EX.ARMY ராம்கிஷன் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

தோழர் வீரமணி  விழுப்புரம்  பகுதி செயலர்ஒருங்கிணைப்பாளர் வரவேற்புரை நிகழ்த்தினார்.

மாவட்ட சங்க செயலர் தோழர் NT நாம் எவ்வாறெல்லாம் நம் உறுப்பினர்களுக்கு காலத்தே சேவை செய்து அவர்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாக நாம் எல்லோரும் இணைந்த கரங்கள் கொண்டு நமக்கு நாமே செயலாற்றுகிறோம் என்பதை எடுத்துரைத்தார்.

தோழியர் விசாலாட்சி கண்ணையன் அவர்களுக்கு 7th CPC – DOT நிலுவை பெற்று தந்ததை கூறினார்.

நமது உறுப்பினர்களின் எதிர்பாரா நிகழ்ச்சிகளின் போது குடும்ப ஓய்வூதியர்களின் குடும்பத்தினருடன் இருந்து நாம் நம் பங்களிப்பான குடும்ப நல நிதியை அளிப்பதையும்,மருத்துவ பில்களை முறையாக விண்ணபித்து அவர்களுக்கு உதவி செய்து வருவதையும்,குடும்ப ஓய்வூதியம் பெறுவதற்கும் வருடாந்திர ஆயுள் ஆவணங்கள் செய்ய வேண்டியதை நினைவுறுத்தியும்,என நாம் பல்வேறு நிலைகளில் இடர்பாடு இல்லா வாழ்க்கைக்கு நாம் ஒரு கருவியாக இருப்பதை எடுத்துரைத்து உரையாற்றினார்.

ஆயுள் சந்தா செலுத்தி நம்மோடு இணைந்த தோழர்கள் 1. மரியசவுரி முகையூர்,
2.கலைவாணி சாமுவேல் விழுப்புரம்,3.இந்திரா மூர்த்தி விழுப்புரம்,மகாலட்சுமி வைத்திலிங்கம் விழுப்புரம்,4.அ.முனுசாமி விழுப்புரம், 5.C.ஆரோக்கிய தாஸ் அறம்கண்டநல்லூர் – இவர்களுக்கு பொன்னாடை போற்றி கவுரவிக்கப்பட்டனர்.

வரும் டிசம்பர் 5 அன்று விழுப்புரம் பகுதி நானாம் ஆண்டு விழா நடத்த இருப்பதையும், விழாவிற்கு தோழர் சுகுமாரன் STR மாநில உதவித்தலைவரை சிறப்பு பேச்சாளராக அழைக்க இருப்பதையும் தோழர் வீரமணி  விழுப்புரம்  பகுதி செயலர் கூறினார்.
விழா சிறப்பாக நடத்த வரவேற்புக் குழு அமைக்கப்பட்டது.

மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள் S.செல்வரசுமேரி,P.கலிவரதன் விழா மண்டப வாடகையை தங்கள் சார்பில் எடுத்துக்கொள்வதாக அறிவித்தனர்.

தோழர் ராஜபத்மனாபன் விழாவிற்கு வரும் சிறப்பு உறுப்பினர்களுக்கான பொன்னாடை முழுச் செலவையும் தான் ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார்.

தோழர்கள் அரிக்கிருஷ்ணன் ஆண்டு விழா தேநீர் செலவை  ஏற்றுக்கொள்வதாகவும்,
நன்கொடையாக அண்ணாமலை ரூ 3000,வீராசாமி ரூ1000-யும் அளித்தனர்.

தோழர் துரைபாபு நன்றி கூறி கூட்டத்தினை நிறைவு செய்தார்.