Translate

வெள்ளி, 14 டிசம்பர், 2012

மலர் 4

சிதம்பரத்தில்  நமது  பொதுக்குழுக் கூட்டம் 

கைப்பேசி 9442228182,9442292582,9486868999  



23-6-2012  அன்று  சிதம்பரம் பகுதி தோழர்களை  அவர்கள் ஊரிலேயே  சந்திக்கும்  முகத்தான்  நாம்  திட்டமிட்ட படியே   இந்த கூட்டம்   சிதம்பரம்  ஸ்ரீ தில்லை கோவிந்தராஜ்  திருமண மண்டபத்தில்  நண்பகல் உணவுக்குப் பின்  110 தோழர்களுடன்  கூட்டம் சிறப்பாக நடந்தது.தோழர் A. ஜெயக்குமார் வரவேற்புக் குழு தலைவர்  அவர்கள் தலைமையில் தோழர்கள் வெங்கடாசலம் ,தனபாலன்,சுதாகர்,தக்ஷிணாமூர்த்தி, இவர்களைக் கொண்ட வரவேற்புக் குழு சிறப்பாக விழா ஏற்பாடுகளை செய்திருந்தது எல்லோருக்கும் மனநிறைவாக இருந்தது.மாவட்ட தலைவர் தோழர் K.ரவீந்திரன் தலைமை உரையாற்ற,  தோழர்  A.ஜெயக்குமார் வரவேற்பு உரை நிகழ்த்தினார்.மாவட்ட  செயலர் தோழர் K.வெங்கடரமணன் சங்க செயல்பாடுகளை  விவரித்துப் பேசினார்.
முன்னணி தோழர்கள் Pசாமிக்கண்ணு,Kஇளங்கோவன் ,.K.சம்சுதீன், Aசேஷு,. S.பாபுசெட்டியார் ,நடராசன் முதலியோரும்,மற்றும் நமது உறுப்பினர்களும் பெருவாரியாக கலந்து சிறப்பித்தனர்.
மாநில  தலைவர் தோழர்   D.கோபாலககிருஷ்ணன்,  சங்க செயல்பாடுகளை  விவரித்து நாம் ஒற்றுமையை கட்டிக் காக்க வேண்டியதன் அவசியத்தை  சுட்டிக் காட்டினார். நாம்  சமூக பிரக்ஜையுடன்   செயலாற்ற வேண்டியதின் அவசியத்தை தெரிவித்தார்.பெட்ரோல் விலை    ஏற்றம்,நீர் நிர்வாகம் போன்ற நம்மை பாதிக்கின்ற செய்திகளை   கூறினார்.கடலூர் கிளை முதல் மாநில மாநாட்டை சிறப்பாக நடத்தியதையும் நினைவு  கூர்ந்தார்.    

தோழர் பால்கி  சிறப்புரை ஆற்றினார்.தோழர்  திருஞானம் நம்முடைய செயல்பாடுகளை விளக்கி பேசினார்.














கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக