Translate

புதன், 13 மார்ச், 2019

       உலக மகளிர்தின விழா  கடலூர் 9-3-2019

9-3-2019 அன்று மாலை கடலூர் ஓய்வூதியர் அலுவலக வெளிப்புற திறந்த  வெளியில்  உலக மகளிர்தின விழா தோழர் சாந்தகுமார்  

தலைமையில்  அரங்கு நிறைந்ததோழியர்களுடன் சிறப்பாக நடந்தது.
தோழியர் செல்வரசுமேரி வரவேற்று உரையாற்றினார்.

 தோழர் தக்ஷிணாமூர்த்தி முன்னிலை வகிக்க சிறப்பாக நடந்தது.மாவட்ட சங்க நிர்வாகிகள் P.ஜெயராமன்,R.அசோகன்,K.வெங்கடரமணன் சிறப்புரையாற்றினர்.
தோழியர் V.விஜயலட்சுமி நோக்கஉரை ஆற்றி, பெண்ணின் பெருமையை கூறி சிறப்பித்தார்.
தோழியர் N.ஜெயந்தி அபர்ணா பெண்ணின் உரிமைகளையும்,பொது வெளியில் சமூகத்தில் பல்வேறு இடர்பாடுகளுடன் பெண்கள் சிறப்பாக பணியாற்றி வீட்டையும்,நாட்டையும்  முன்னேற்றும் கடமைகளையும் கூறி சிறப்புரையாற்றினார்.
தலைவர் தோழர் PJ ,செயலர் அசோகன்  அவர்கள் மூன்றாவது ஓய்வூதிய மாற்றங்களின் தற்போதைய நிலை,மத்திய சங்கத்தின் செயல்பாடுகள் ,மருத்துவ பில்கள் கிடைப்பதற்கான நமது முயற்சி,நிதி நிலைமை எல்லாவற்றையும் விளக்கி பேசினார்கள்.
உற்சாகத்துடன் கலந்துகொண்ட தோழியர்கள் அனைவருக்கும் போன்னாடைப் போற்றி கெளரவபடுத்தப்பட்டனர்.

























தோழியர் L.ஜானகி நன்றியுரை ஆற்றி நகழ்வினை நிறைவு செய்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக