Translate

ஞாயிறு, 12 ஜனவரி, 2020


கடலூர்.மாவட்ட AIBSNLPWA ஓய்வூதியர் தின 
சிறப்பு கூட்டம் 07.01.2020


07.01.2020  சார்பில்  கடலூர் நகர  அரங்கில்  விமரிசையாக நடந்தது.
இன்றைய தினம் காலை Cuddalore மாவட்ட செயற்குழு கூட்டமும் நடந்தேறியது.

 மாவட்ட தலைவர் தோழர்.P.ஜெயராமன் தலைமை தாங்கினார்.
தோழர்.சாந்தகுமார் வரவேற்பு உரை நிகழ்த்தி னார். 














தோழர் R.அசோகன் மாவட்ட செயலாளர் துவக்க உரை ஆற்றினார்கள்

மாநில உதவித்தலைவர்  தோழர் K. சந்திரமோகன்  அவர்கள் பொதுவான நமது மாவட்ட,மாநில நிகழ்வுகளையும் எடுத்துரைத்தார்.
CGHS (மத்தியஅரசு ஊழியர்களின் நலத்துறை ) இல் நாம் சேரவேண்டிய அவசியத்தையும் , அதற்காக  நாம் செய்ய வேண்டிய 
(1.)நமது மருத்துவ சேவை அடையாள அட்டையை திரும்ப கொடுத்துவிட்டு  அதற்கான அத்தாட்சியை பெறுதல்
(2.)நமது ஓய் வூ தியத்தி ற்கு  இணையான மத்திய அரசு ஓய் வூ தியம்  CCATN  அவர்களிடம் ஆணை பெற வேண்டியது 
 (3).இந்த இரண்டு ஆணைகளை யம்  இணைத்து  நாம் 
CGHSகிளைகளில் நாம் வருட/ஆயுள் முன்பணம் எவ்வளவு என்பதை கேட்டு, CGHS  இல் சேருவதற்கான விண்ணப்பத்தையும் ,முன்பணத்தையும்  ஆன்லைனில் செலுத்தி பாரத் கோஷ்  ரசீதை  பெற்று  அதை இணைத்து நாம் CGHS  அடையாள அட்டை பெற ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் .
பிளாஸ்டிக் அட்டை வருவதற்கு ஓரிரு மாதங்கள்  ஆகும் என்பதால் தற்காலிக அடையாள அட்டை நாம் கொடுக்கும் போட்டோ வை  இணைத்து கொடுப்பார்கள்.பிளாஸ்டிக் அட்டை வரும் வரை இந்த தற்காலிக அடையாள அட்டையை காட்டி நமது மருத்துவ சேவைகளை பயன்படுத்திக் கொள்ளலாம் .

           செலுத்திய முன்பணம் ஒரு தடவை மட்டில்தான் BSNL ஆல் கொடுக்கப்படும். என்ற அட்டவணை ப்படி பயனர்  செய்யவேண்டியவற்றை  எடுத்துரைத்தார். 


மாநில செயலாளர்.தோழர்.R.வெங்கடாச்சலம் சிறப்புரை யாற்றினார்.
கடலூர் மாவட்ட பகுதி விழுப்புரம் ,கடலூர்  திண்டிவனம்,சிதம்பரம்,நெய்வேலி,விருத்தாச்சலம் கள்ளக்குறிச்சி ,செஞ்சி ,பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களும்  ஆர்வமுடன் கலந்துக்க கொண்டனர்.

கடலூர். மாவட்ட NFTE செயலாளர்.ஸ்ரீதர் வாழ்த்துரை வழங்கினார்கள். 

 மாவட்ட பொருளாளர்.ஹாஜா காமலுதீன் நன்றி உரை கூறினார். இன்றைய தினம் காலை கடலூர்.மாவட்ட செயற்குழு கூட்டமும் நடந்தேறியது. இன்றைய தினம் இறுதியாக   


மாவட்ட தலைவர்.தோழர் P .ஜெயராமன்  அவர்களின்  77 வ து பிறந்தநாள் விழாவினை ஒட்டி அவர்க்கு மாநில செயலாளர்.தோழர்.R.வெங்கடாச்சலம் அனைத்து தோழர்களின் கரவொலி  முழங்க பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்கள்  தெரிவித்தார் 

கலந்துக்கொண்ட  அனைத்து  தோழர்களும்  சிற்றுண்டி சுவைத்து  மகிழ்ச்சியுடன் விடை ப் பெற்றனர்/ 


நிறைவாக மாவட்ட பொருளாளர்.ஹாஜா காமலுதீன் நன்றி உரை கூறினார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக