Translate

ஞாயிறு, 17 ஆகஸ்ட், 2014

வெற்றிகரமான 4 வது AIBSNLPWA தமிழ்நாடு மாநிலமாநாடு- 2014.
4 வது AIBSNLPWA தமிழ்நாடு மாநிலமாநாடு வெற்றிகரமாக நெல்லை சங்கீத சபா- திருநெல்வேலியில் தோழர் .K.முத்தியாலு  மாநிலத்
தலைவர் தலைமையில் 13-8-2014, 14 -8-2014 தேதிகளில்  நடைபெற்றது.தேசிய கொடி ஹாஜி  அகமது மீரான், தலைவர், வரவேற்பு குழு அவர்களால் ஏற்றுவிக்கப்பட்டது. சங்கத்தின் கொடியை நமது  அகில இந்திய தலைவர்  தோழர்  P.S.ராமன்குட்டி  அவர்கள் ஏற்றுவித்தார்.    பொது செயலாளர் தோழர் G.நடராஜன்  துவக்க உரையாற்றி, வாழ்த்துக்கள் தெரிவித்து மாநில மாநாட்டை தொடங்கி வைத்தார்.   சகோதர சங்க  தலைவர்கள் மாநாட்டில் கலந்துக்கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.   பொது மேலாளர் BSNL, திருநெல்வேலி மதிப்புக்குரிய திரு B.முருகானந்தம் அவர்கள் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்.மாநில மாநாட்டு   மண்டபம் திறன் 950 பேர்.   கிட்டத்தட்ட 1,100 ஓய்வூதியம் பெறுவோர் பொது அரங்கில்  கலந்து கொண்டனர்.  அனைத்து மாவட்ட கிளைகளிலிருந்து   (51 பெண்கள் உட்பட) 493 பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்து கொண்டனர்.   'PFRDA சட்டத்தினை அகற்றுதல், ஓய்வூதியம் 78.2% IDA பணியில் இருக்கும் ஊழியர்களுக்கு இணையாக வழங்குதல், பொதுத்துறை பங்குகளின் DISINVESTMENT-ஐ  நிறுத்த்தவேண்டும் ஆகிய முக்கிய தீர்மானங்கள் ,  ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டன.   .  வரவேற்பு குழுவினர் அருமையான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.   .தோழர் படா  நாயர் கேரள மாநிலச்  செயலாளர், தோழர் செங்கப்பா  கர்நாடக மாநிலச்  செயலாளர் வாழ்த்திப்பேசினர்.தோழர் D.பாலசுப்ரமணியன் பொதுச்செயலாளர் AIFPA அவர்கள்  ஏழாவது சம்பளக்கமிஷன் பற்றிய சமீப போக்குகள் பற்றி மதிப்புமிக்க தகவல்களை கூறி , தங்கள் அமைப்பின் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.மாநாட்டு  செய்திகள்  14 ம் தேதி தினகரன், 'தினமணி, தினத்தந்தி, தினமலர் போன்ற தமிழ் நாளிதழ்களிலும் வெளியானது 
நன்றியுரை Com.S.அருணாச்சலம்மாவட்ட செயலாளர் திருநெல்வேலி 
மாவட்டம் கிளை மூலம் வழங்கப்பட்டது.

நீண்ட நாள் கோரிக்கையான ஆயுள் சந்தா உறுப்பினர் அட்டை 

வழங்கல் மத்திய சங்க ஒப்புதலுடன்,5000 புதிய அட்டைகள் 

அச்சடிக்கபட்டு,மாவட்டக்கிளையின் எண்ணிக்கைக்கு ஏற்ப 

மாநிலச்செயலர் கொடுத்தார்..முதல் நான்கு அட்டைகள் தோழர்கள் 

G.நடராஜன்,D.கோபாலகிருஷ்ணன்,K.முத்தியாலு,V.ராமாராவ் 

அவர்களுக்கு மாநாட்டு மேடையிலேயே வழங்கப்பட்டது.






மேலும் நிழற்படங்களுக்கு கீழே சொடுக்கவும்.

AIBSNLPWA 4 வது தமிழ் மாநில மாநாடு 2014         


புதிய சங்க நிர்வாகிகள்
                                       தலைவர் 
 தோழர். K.முத்தியாலு                (சென்னை)
                உதவித்தலைவர்                           
 தோழர் . A.சுகுமாரன்             (சென்னை )
 தோழர்.K.ரவீந்திரன்             (கடலூர்)
 தோழர்.C.பழனிச்சாமி            (கோவை)
  தோழர்.C.சங்கரன்                   (மதுரை)
  தோழர் . M.அமிர்தலிங்கம்     ( சேலம்)

                                         செயலர்  
  தோழர்.V.ராமாராவ்                       (சென்னை )
                                 
                                    உதவிச்செயலர்
 தோழர்.S.ஸ்ரீதரன்                       (சென்னை )
 தோழர்.S.சம்பத்குமார்           (சென்னைI)
 தோழர்.D.அன்பழகன்              (புதுச்சேரி )    
 தோழர்.P.K.பாலகிருஷ்ணன்    ( சேலம் )
 தோழர்.N.அம்பிகாபதி                (தூத்துக்குடி)
 தோழர்.O.அபூபக்கர்                   ( மதுரை)
  தோழர்.T.செல்வராஜ்                         (திருச்சி)

                                       பொருளாளர்   
 தோழர்.M.கௌஸ்பாஷா           (சென்னை )

                                   உதவிப்பொருளாளர்    
  தோழர் .கனகராஜ்               ( திருநெல்வேலி )
  தோழர்.N.இசக்கிமுத்து               (கும்பகோணம்)

                                     அமைப்புச்செயலர்   
  தோழர் .K.S.கிருஷ்ணமூர்த்தி     (தஞ்சை)
  தோழர் B.அருணாசலம்                  (கோவை )
  தோழர்.S.சம்மனசு                   (திருநெல்வேலி )
  தோழர்.K.சிவகாமசுந்தரிI     (கோவை)
  தோழர்.M.M.வைரமணிI              (விருதுநகர்)
  தோழர்.V.S.முத்துகுமரன்     (வேலூர்)
  தோழர்.B.டேவிட்                                (நாகர்கோவில்)
  தோழர்.N.நாகேஸ்வரன்                (காரைக்குடி)
                                  சிறப்பு அழைப்பாளர்
தோழர்.D.S.RAMALINGAM              (சென்னை ) 

தணிக்கையாளர் : ஸ்ரீ.P.S.ராமச்சந்திரன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக